×

கண்டமனூர் பகுதியில் அதிமுக நிர்வாகிகள் விருப்ப மனு

வருஷநாடு, நவ. 20: கண்டமனூர் பகுதியில் அதிமுக நிர்வாகிகள் உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு செய்வதில் தீவிரம் காட்டினர். கண்டமனூர் எட்டப்பராஜபுரம், கணேசபுரம், புதுராமச்சந்திராபுரம் பொன்னம்மாள்பட்டடி போன்ற கிராமப் பகுதியில் இருக்கும் அதிமுக நிர்வாகிகள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருக்கான வேட்புமனு அதிமுக சார்பில் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

எட்டப்பராஜபுரம் கிராம ஒன்றிய கவுன்சிலருக்கான விருப்ப மனுவை கம்பம் எம்எல்ஏ ஜக்கையனிடம் கார்த்திகை செல்வி பழனிசாமி, வழங்கினார். இதில் கடமலை மயிலை ஒன்றிய செயலாளர் கொத்தாளமுத்து, அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் முருக்கோடை ராமர், எட்டப்பராஜபுரம் ஊராட்சி செயலாளர் சேகர், பொன்னம்மாள்பட்டி கிளைச் செயலாளர் குமரேசன். எம்எல்ஏ ஜக்கையன், அதிமுக மாவட்ட செயலாளர் சையதுகான் மற்றும் கடமலை மயிலை ஒன்றிய ஊராட்சி கழக, கிளை கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் போட்டி போட்டுக்கொண்டு விருப்பமனு தாக்கல் பணி நடைபெற்றது.

Tags : executives ,AIADMK ,
× RELATED கன்னியாகுமரி சென்டர் பில்டர்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் பதவியேற்பு