×

மூதாட்டியின் 10 பவுன் நகையை அபேஸ் செய்த ‘டம்மி’ போலீஸ்

தேவகோட்டை, நவ.20: தேவகோட்டையில் போலீஸ்போல் நடித்து மூதாட்டியிடம் 10 பவுன் நகை அபேஸ் செய்யப்பட்டுள்ளது. தேவகோட்டை வர்த்தக சங்க செயலாளர் சிவலிங்கம். இவரது மனைவி வள்ளி ஆச்சி(65). இவர் நேற்று மதியம் கள்ளிக்கோட்டை சோம வீதியில் உள்ள மகள் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது டிப்டாப் உடையில் வந்த ஒரு ஆசாமி, நான் போலீஸ் என்று வள்ளி ஆச்சியிடம் அறிமுகம் செய்து கொண்டார்.

பின்னர், ‘இப்பகுதியில் வழிப்பறி திருடர்கள் தொல்லை அதிகம் உள்ளது. எனவே உங்களது நகைகளை கழற்றி பத்திரமாக இதில் வைத்து செல்லுங்கள்’ என ஒரு பேப்பரை நீட்டினார். இதை நம்பிய வள்ளி ஆச்சி தனது 10 பவுன் செயின், வளையல்களை கழற்றி அவரிடம் கொடுத்தார். அவர் பேப்பரில் சுற்றி வள்ளி ஆச்சியிடம் கொடுத்து, ‘பத்திரமாக கொண்டு செல்லுங்கள்’ என்று கூறிவிட்டு சென்றார். மகள் வீட்டிற்கு சென்ற வள்ளி ஆச்சி, பேப்பரை திறந்து பார்த்தார். அதில் வெறும் கவரிங் நகைகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தேவகோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் நகை திருடப்பட்ட சம்பவம் தேவக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Dummy' Police Abbey ,
× RELATED கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்