உசிலம்பட்டி, நவ. 20: பேரையூர் தாலுகா, சேடபட்டி ஒன்றியத்திற்குட்பட்டது ஆத்தாங்கரைபட்டி. இவ்வூரில் கடந்த நவ. 12ம் தேதி இங்குள்ள சமுதாயக்கூடத்தில் திருமங்கலத்திலுள்ள தனியார் மருத்துவமனையும், தனியார் அமைப்பும் இணைந்து பொது மருத்துவ முகாம் நடத்தியுள்ளனர். இம்முகாமில் சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு தவசி (70), பெரியசாமி, தங்கத்தாய், மச்சக்காளை ஆகியோரை திருமங்கலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதில் தவசி மட்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து தவசி மகன் கடந்த நவ.16ம் தேதி எழுமலை போலீசில் புகார் அளித்தார். அன்றிரவு நாகமலைபுதுக்கோட்டை காவல்நிலையத்திற்குட்பட்ட நான்கு வழிச்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயங்களுடன் தவசி இறந்து விட்டதாகவும், அவரது உடல் மதுரை அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நாகமலைபுதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.