திண்டுக்கல், நவ. 20: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் காங்கிரஸார் மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் கட்சி அலுவலகத்தில் இந்திராகாந்தியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் துணைத்தலைவர்கள் அரபுமுகமது, ஜபருல்லா, மண்டல தலைவர்கள் ரகுமான், தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணைத் தலைவர் ராஜாஜி, பொதுக்குழு உறுப்பினர்கள் சிவாஜி, ஜோதிராமலிங்கம், மாநகர சிறுபான்மை பிரிவு தலைவர் காஜாமைதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.