நத்தம், நவ. 20: மாநில அளவில் நடைபெறும் தடகள போட்டிக்கு நத்தம் மாணவ, மாணவிகள் தேர்வு பெற்றுள்ளனர். நத்தம் ராம்சன்ஸ் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் திண்டுக்கல்லில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு அளவிலான விளையாட்டுப் போட்டிளில் வெற்றிபெற்றுள்ளனர். இவர்கள் சேலத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள தேர்வாகியுள்ளனர்.