கொடைக்கானல். நவ. 19: கொடைக்கானலில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் முகாமில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் முகாமிற்கு கொடைக்கானல் ஆர்டிஓ சுரேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் குறைதீர்க்கும் முகாமில் கொடைக்கானல் மலைப்பகுதி விவசாயிகள் சென்று கலந்துகொள்ள முடியாத காரணத்தினால் முதல்முறையாக கொடைக்கானல் பகுதியிலேயே விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.