×

பழநி அருகே சோகம் மனநிலை பாதித்த பெண் கிணற்றில் குதித்து தற்கொலை

பழநி, நவ.20: பழநி அருகே பாலசமுத்திரத்தில் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். பழநி அருகே பாலசமுத்திரம், குறும்பபட்டியைச் சேர்ந்தவர் கருப்பணன். இவரது மனைவி லட்சுமி (47). 2 மகன்கள் உள்ளனர். 1 மகனுக்கு திருமணமாகி விட்டது. மற்றொருவர் மாற்றுத்திறனாளி. லட்சுமிக்கு லேசான மனநிலை பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அருகில் இருந்த  கிணற்றில் குதித்து விட்டார். இதனைக் கவனித்த அக்கம், பக்கத்தினர் இதுகுறித்து பழநி தீயணைப்புப் படையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி லட்சுமியின் உடலை மீட்டனர். இதுகுறித்து பழநி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicide ,well ,Palani ,
× RELATED பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: பாஜ மாவட்ட செயலாளர் கைது