சேலம் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட காங்., அலுவலகத்தில் நாளை முதல் 3 நாள் விருப்பமனு

சேலம், நவ.20: சேலம் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கட்சியினரிடம் விருப்பமனு பெறப்படுகிறது.தமிழக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்கவுள்ளதால், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் இருந்து விருப்பமனுக்கள் பெறும் முகாம் மாநிலம் முழுவதும் மாவட்டம் வாரியாக நாளை முதல் 3 நாட்கள் நடக்கிறது. சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், முள்ளுவாடிகேட் அருகேயுள்ள கட்சி அலுவலகத்தில் நாளை(21ம் தேதி) முதல் 23ம் தேதி வரை 3 நாட்களுக்கு மாநகராட்சி மேயர், கவுன்சிலர், கன்னங்குறிச்சி பேரூராட்சி, கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான விருப்பமனுக்கள் பெறப்படுகிறது.மாநகராட்சி மேயர் பதவிக்கு ₹10 ஆயிரமும், மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு ₹3 ஆயிரமும், பேரூராட்சி தலைவருக்கு ₹3 ஆயிரமும், கவுன்சிலருக்கு ₹ஆயிரமும், மாவட்ட ஊராட்சிக்குழு கவுன்சிலருக்கு ₹3 ஆயிரமும், ஒன்றிய குழு கவுன்சிலருக்கு ₹2 ஆயிரமும் செலுத்தி விருப்பமனுக்களை மாநகர் மாவட்ட தலைவர் ஜெயப்பிரகாஷிடம் வழங்க வேண்டும். பெண்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 50 சதவீத சலுகை வழங்கப்படுகிறது என மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.

 

Related Stories: