×

தீர்த்தமலையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

தர்மபுரி, நவ.20: அரூர் அருகே தீர்த்தமலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வரும் 23ம் தேதி சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.  இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் டி.ஆர். கல்வி அறக்கட்டளை  இணைந்து அரூர், தீர்த்தமலை மற்றும் சுற்றுவட்டார இளைஞர்கள், பழங்குடியினருக்கான  சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது. தீர்த்தமலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வரும் 23ம் தேதி நடைபெறும் முகாமில் தர்மபுரி, சேலம், ஓசூர், திருப்பத்தூர் மற்றும் அரூர் பகுதியைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
இம்முகாமில் 10ம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களும், தையல் உள்ளிட்ட தொழிற்பயிற்சி முடித்தவர்களும் கலந்துக்கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம்.  முகாமில் தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகம் வாயிலாக பியூட்டீசியன், நர்சிங் அசிஸ்டன்ட், டைலரிங் மற்றும் ஓட்டுநர் போன்ற பயிற்சிகள் இலவசமாக வழங்க பதிவு மேற்கொள்ளப்படுகிறது. இதுமட்டுமன்றி சுயதொழில் தொடங்குவதற்கான ஆலோசனையும், அரசு மானியத்துடன் கூடிய கடன்பெறுவதற்கான வழிகாட்டுதலும் நடைபெற உள்ளது. எனவே, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உரிய சான்றிதழ்களுடன் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். தகுதியும்,
விருப்பமும் உள்ள நபர்கள் அனைவரும், வரும் 23ம் தேதி 9 மணிக்கு அரூர் அருகே உள்ள தீர்த்தமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.
 இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : employment camp ,
× RELATED மாவட்ட கலெக்டர் ஆபீசில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம்