×

பராமரிப்பு பணிகளுக்காக எரிவாயு மயானம் மூடல்

ஊட்டி, நவ. 20: ஊட்டி மஞ்சக்கொரை பகுதியில் உள்ள எரிவாயு தகன மயானம் பராமரிப்பு பணிகளுக்காக வரும் 21ம் தேதியில் இருந்து 30ம் தேதி வரை மூடப்படுவதாக நகராட்சி தெரிவித்துள்ளது.ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய வசதியாக நகராட்சி சார்பில் ஊட்டி அருகேயுள்ள மஞ்சனக்கொரை பகுதியில் எரிவாயு தகன மயானம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் நீண்ட நாட்களாக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் இங்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. இதை தொடர்ந்து நாளை 21ம் தேதி முதல் 30ம் தேதி வரை பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி பொறியாளர் ரவி கூறுகையில், ‘‘ஊட்டி மஞ்சனக்கொரை பகுதியில் உள்ள எரிவாயு தகன மயானத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக 21ம் தேதியில் இருந்து 30ம் தேதி வரை மூடப்படுகிறது,’’ என்றார்.


Tags :
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...