ஈரோடு, நவ.20: ஈரோடு ஜவுளி சந்தையில் ஐயப்ப பக்தர்கள் அணியும் ஆடைகளின் விற்பனை நேற்று விறுவிறுப்பாக நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.ஈரோடு ஜவுளிசந்தை வாரந்தோறும் செவ்வாய்கிழமை நடந்து வருகிறது. தீபாவளி பண்டிகை சீசன் விற்பனை முடிவடைந்த நிலையில் கடந்த இரு வாரமாக வியாபாரம் மந்தநிலையில் காணப்பட்டது. தற்போது கார்த்திகை மாதம் துவங்கி உள்ளதையடுத்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் அணியும் ஆடைகளின் விற்பனை களைகட்ட துவங்கி உள்ளது. இதுகுறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறுகையில்,`தீபாவளிக்கு பிறகு ஜவுளி சந்தையில் இந்த வாரம் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.