×

தூத்துக்குடி வாலிபர் மர்மச்சாவு

புதுக்கோட்டை, நவ. 20:   தூத்துக்குடி திரேஸ்புரம் லைன்ஸ்டோன் 5வது தெருவை சேர்ந்தவர் கனகராஜ் மகன் பிரசாந்த்  (37). மீனவர். கடந்த 17ம்தேதி மாலை பிரசாந்த் தனது நண்பர்களுடன்  புதுக்கோட்டை அருகே கோரம்பள்ளம் குளத்தில் குளிக்க சென்றனர். அப்போது  பிரசாந்த்தை காணவில்லையென கூறப்படுகிறது. அவர் குளித்துவிட்டு  சென்றிருக்கலாம் என கருதிய அவரது நண்பர்கள் அங்கிருந்து சென்றனர். ஆனால்  பிரசாந்த் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர், அவரை தேடும் பணியில்  ஈடுபட்டனர்.
இந்நிலையில் கோரம்பள்ளம் குளத்தில் நேற்று முன்தினம் காலை  பிரசாந்த் இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து விரைந்துசென்ற புதுக்கோட்டை  இன்ஸ்பெக்டர் (ெபாறுப்பு) பார்த்தீபன், எஸ்ஐ (பொறுப்பு)  சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார், உடலை  கைப்பற்றி  தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். அவர் கொலை  செய்யப்பட்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thoothukudi Youth Marmachau ,
× RELATED தருவைகுளத்தில் திருப்பயணிகள் இல்லம் திறப்பு