திருச்சியில் வங்கி ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்

திருச்சி, நவ.19: திருச்சியில் வங்கி ஓய்வூதியர்கள் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்தினர். ஓய்வூதியருக்கான உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். அனைத்து ஓய்வதியர்களுக்கும் 100 சதவீத பஞ்சப்படியை ஈடுசெய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட அனைத்திந்திய வங்கி ஓய்வூதியர் பணி மூப்படைந்தோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்க மாவட்ட செயலாளர் அசோக், ஊழியர் சங்க துணை செயலாளர் ஜெகநாதன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: