திருச்சி ரயில் நிலையத்தில் எஸ்பி திடீர் ஆய்வு

திருச்சி, நவ.19: திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் புதிய எஸ்பி செந்தில்குமார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.திருச்சி ரயில்வே எஸ்பியாக சமீபத்தில் செந்தில்குமார் பதவியேற்றுக்கொண்டார். அதன்பின்பு முதல்முறையாக நேற்று திருச்சி ஜங்ஷன் ரயில்நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீசார் பாதுகாப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் ரயில்நிலைய பிளாட்பாரங்களில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் குற்றச்சம்பவங்கள் தடுப்பு நடவடிக்கைள் குறித்தும் கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து பாதுகாப்பு பணிகள் குறித்து போலீசாருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

Related Stories: