×

ஜெயங்கொண்டம் அருகே டாஸ்மாக் சூப்பர்வைசர் வீட்டில் கொள்ளையடித்த 2 பேர் கைது

ஜெயங்கொண்டம், நவ.19: ஜெயங்கொண்டம் அருகே டாஸ்மாக் சூப்பர்வைசர் வீட்டில் கொள்ளையடித்–்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் வட வீக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (45).இவர் கடலூர் மாவட்டம் முஷ்ணம் டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக பணி புரிந்து வருகிறார். இவர் வழக்கம் போல் கடந்த அக்டோபர் 3ம் தேதி பணிக்கு சென்றுவிட்டார். இவரது மனைவி கீதா குணமங்கலம் கிராமத்தின் அருகே உள்ள மதகளிர் மாணிக்கம் என்ற கிராமத்தில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று மீண்டும் மாலை வந்து பார்த்த போது முன்பக்க கதவுகள் திறந்த நிலையில் கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 36 பவுன் நகைகள் ரூ ரூ.30 ஆயிரம், 5 ஜோடி கொலுசுகள் உள்ளிட்ட வெள்ளி பொருட்கள் ஆகியவை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து ஜெயங்கொண்டம் டிஎஸ்பி மோகன்தாஸ் தலைமையிலான இன்ஸ்பெக்டர்் ராஜ்மோகன் மற்றும் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் பெரம்பலூரில் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு கைது திருச்சி மத்திய சிறையில் இருந்த கரூர் மாவட்டத்தை சேர்ந்த கணபதிபாளையம் கிராமத்தை சேர்ந்த விஜயராஜ் மகன் ரத்தினகிரீஸ்வரர் என்கிற கிரி (23) மற்றும் தஞ்சை மாவட்டம் கீழ திருப்பந்துருத்தி கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் சம்பத் (34)ஆகிய இருவரையும் பிடிவாரண்ட் கொடுத்து ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர்( பொ) மலைச்சாமி காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து விசாரணை செய்து ஜெயங்கொண்டம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் சக்திவேல் இருவரையும் திருச்சி மத்திய சிறையில் 15 நாள்் காவலில் வைக்க உத்தரவிட்டார். இருவரிடமிருந்து 12 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.

Tags : persons ,robbery ,
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது