×

சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

சீர்காழி, நவ.19: நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்மவித்யாம்பாள் சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் காசிக்கு இணையான ஆறு கோயில்களில் ஒன்றாகவும், பிரம்மவித்யாம்பிகை சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.  கார்த்திகை சோமவாரத்தையொட்டி சங்காபிஷேகங்கள் தமிழகத்தில் ஒருசில கோயில்களில் மட்டுமே பண்டைய காலத்தொட்டு நடைபெற்று வருகிறது. அதில் ஒருகோயிலாக இந்த கோயில் விளங்குவது கூறிப்பிடதக்கது. நேற்று கார்த்திகை முதல் சோமவாரத்தையொட்டி நேற்று சுவேதாரண்யேஸ்வரருக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி 1008 சங்குகள் சிவ வடிவத்தில் சன்னதியின் முன்பகுதியில் வைக்கபட்டு அலங்கரிக்கபட்டு இருந்தது. மேலும் சங்குகளில் நறுமணப்பொருட்களால் ஆன புனிதநீர் நிரப்பட்டது.

மேலும் ஆலய அர்ச்சகர் வினோத் குருக்கள் தலைமையில் வேதவிற்ப்பனர்களை கொண்டு மகா யாகம் நடைபெற்றது. அதனைதொடர்ந்து வலம்புரி மற்றும் இடம்புரி சங்குகள் கோயிலிலன் பிரகாரத்தில் ஊர்வலமாக மேளதாளம் முழங்கிட கொண்டு செல்லபட்டன.  பின்னர் சுவேதாரண்யேஸ்வரருக்கு 1008 சங்குகளிலிருந்த புனிதநீரை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சுவாமி மற்றும் அம்மனுக்கு தீபாராதனை காட்டபட்டது. இதில் கோயில் நிர்வாக அதிகாரி முருகன், பேஸ்கர் திருஞானம், முன்னாள் ஒன்றியக்குழத்தலைவர் ரவி, உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் பக்தர்கள் செய்திருந்தனர்.

தரங்கம்பாடி: கார்த்திகை முதல் சோமவாரத்தை ஒட்டி நேற்று திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரருக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அமிர்தகடேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இரவு பஞ்சமூர்த்திகளின் வீதி உலா காட்சியும் நடந்தது. இதில் தருமபுர ஆதின இளைய சன்னிதானம், ஆதின அலுவலர்கள், திருக்கடையூர் தேவஸ்தான அலுவலர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

Tags : Swetharanyeswarar Temple ,
× RELATED சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தெப்போற்சவம்