×

வித்யா பவன் மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா

திருச்செங்கோடு, நவ.19: திருச்செங்கோடு விவேகானந்தா வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. விழாவிற்கு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் கருணாநிதி தலைமை வகித்தார். கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனையின் மேலாண்மை இயக்குநர் கிருஷ்ணவேணி கருணாநிதி, துணை மேலாண்மை இயக்குநர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரன், இணைச்செயலாளர் டாக்டர் ஸ்ரீராகநிதி அர்த்தநாரீஸ்வரன், நிதிவர்ஷிகா, துணைத் தாளாளர் டாக்டர் கிருபாநிதி, நிர்வாக இயக்குநர் டாக்டர் நிவேதனா கிருபாநிதி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் கல்வி ஆலோசகருமான விஸ்வநாதன், தலைமை நிர்வாகி சொக்கலிங்கம், சேர்க்கை இயக்குநர் வரதராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக திருச்செங்கோடு டிஎஸ்பி சண்முகம் கலந்து கொண்டார்.

தாளாளர்  கருணாநிதி பேசுகையில், ‘ஒவ்வொரு பெற்றோரும் கல்வியில் முதல் மதிப்பெண் பெறஎதிர்பார்ப்பதை போல், விளையாட்டிலும் மாணவர்கள் பங்குபெற்றுள்ளனரா என்பதை ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொண்டு மேலும் ஊக்கப்படுத்த வேண்டும்,’ என்றார். விழாவில் மாணவிகள் பல வகையான சாகசங்களை செய்து காட்டினர். பின்னர், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. முதல்வர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Sports Festival ,Vidya Pawan Matric School ,
× RELATED பரமக்குடியில் விளையாட்டு விழா