×

மணல் கடத்திய 2 பேருக்கு வலை

திருக்கோவிலூர், நவ. 19:
திருக்கோவிலூர் அருகே செம்படை தென்பெண்ணையாற்று பகுதியில் மணலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த கருணாநிதி மகன் முருகன் (24), ராமர் மகன் சுதாகர் (23) ஆகிய 2 பேரும் அனுமதியின்றி தென்பெண்ணையாற்றில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மணலுடன் 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய முருகன், சுதாகரை தேடி வருகின்றனர்.


Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...