விழுப்புரம், நவ. 19: விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் திருமணம் செய்து ஏமாற்றிய கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயன்றார்.விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைகேட்புக்கூட்டம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் மனு கொடுக்க வந்திருந்தனர். இந்நிலையில் விழுப்புரம் அருகே பரசுரெட்டிப்பாளையம் கெங்கையம்மன்கோயில் ெதருவைச் சேர்ந்த ராஜா மனைவி பூவழகி(28) என்பவர் தனது 3 வயது குழந்தையான யுவந்திகாவுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது தான், வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தன்உடலிலும், குழந்தை உடலிலும் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி அவரை காப்பாற்றினர். விசாரணையில், அவர் கூறியதாவது:எங்கள் ஊரைச் சேர்ந்த சுப்ரமணி மகன் ராஜா(30). நாங்கள் இருவரும் காதலித்து வந்தோம் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி கடலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத்திருமணம் செய்துகொண்டோம்.