கள்ளக்குறிச்சி, நவ. 19: கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் துவக்க விழா மற்றும் அரசின் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி வருகின்ற 27ம் தேதி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய மாவட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் விதமாக துவக்கி வைக்க உள்ளார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி பெருவங்கூர் செல்லும் சாலை பகுதியில் உள்ள மைதானத்தில் விழா நடைபெறுவதற்கான இடம் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டன. இதையடுத்து, அந்த பகுதியில் விழாமேடை அமைக்கும் பணி துவக்க விழா நிகழ்ச்சியானது நேற்று கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட ஆட்சியர் கிராண்குராலா தலைமையில் நடந்தது. விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் குமரகுரு எம்எல்ஏ, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு ஆகியோர் முன்னிலை வகித்து பந்தல்கால் நட்டு துவக்கி வைத்தனர்.