×

ஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகளுக்கு மானியம்


தேன்கனிக்கோட்டை, நவ.19: தோட்டக்கலை மூலம் ஆழ்துளை கிணறு, மின்மோட்டார், ஆயில் இன்ஜின்  அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து, தளி தோட்டக்கலை உதவி இயக்குநர் சுப்பிரமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
 தளி  வட்டாரத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கு நுண்ணீர் பாசன திட்டத்தை  ஊக்கப்படுத்தும் வகையில், ஆழ்துளை கிணறு அமைக்க ₹25 ஆயிரம் மானியம், மின் மோட்டார், ஆயில் இன்ஜின் கொள்முதல் செய்ய ₹15 ஆயிரம், பைப்லைன்  அமைக்க ₹10 ஆயிரம், நீர்சேமிப்பு தொட்டி அமைக்க ₹40 ஆயிரம் கூடுதலாக  வழங்கப்படுகிறது. மேலும், உயர் விளைச்சலை தரக்கூடிய தரமான தக்காளி, மிளகாய், முட்டைகோஸ், பூகோஸ் நாற்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.  உரிய ஆவணங்களை விவசாயிகள் சமர்ப்பித்து, மானியங்களை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED சூதாடிய 3 பேர் கைது