×

மகனிடமிருந்து நிலத்தை மீட்க தாய் கோரிக்கை

மூணாறு, நவ.19: மூணாறு  அருகில் தேவிகுளம் இறைச்சிபாறை பகுதியை சேர்ந்தவர் மேரியம்மா (80). இவருக்கு 3 மகள்களும், 4 மகன்களும் உள்ளனர். கணவர் நோயால் இறந்து விட்டார். இதனால் கூலி வேலை செய்து 3 மகளை திருமணம் செய்து கொடுத்துள்ார். 4 மகன்களில் ஒருவர் உயிரிழந்து விட்டார். தனக்கு சொந்தமான 5 சென்ட் நிலத்தை தரச்சொல்லி மகன் கிளமண்ட்  தினமும் அடித்து உதைத்து வீட்டை விட்டு வெளியேற்றியதில் அனாதை இல்லத்தில் வசிப்பதாக தேவிகுளம் துணை கலெக்டரிடம் மூதாட்டி மேரியம்மா கண்ணீர் மல்க மனு கொடுத்தார். தனது நிலத்தை மகனிடமிருந்து மீட்டுத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

Tags : land ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!