×

மூணாறு அருகே கனமழையால் வீடு இடிந்தது : விவசாய நிலங்கள் நாசம்

மூணாறு, நவ.19: மூணாறு அருகே சின்னக்கானல் பகுதியில் பெய்த கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டதில் விவசாய நிலங்கள் சேதம்டைந்தது. தொழிலாளியின் வீடும் இடிந்தது. மூணாறு அருகே உள்ள சின்னக்கானல் பகுதியில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது.  இதனால் பழங்குடி மக்கள் குடியிருப்பான செண்பகதோளுவில் மண்சரிவு ஏற்பட்டது. மாலை 6 மணி முதல் இரவு 11 மணிவரை வீடாது பெய்த கனமழை  காரணமாக இப்பகுதியைச் சேர்ந்த சிவன் என்பவரது வீடு இடிந்தது. மற்றொரு வீட்டின் அறையில் சிவன் மற்றும் அவரது மனைவி வீரலட்சுமி தூங்கிக் கொண்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

மேலும் மருதமுத்து என்பவரது விவசாய நிலத்தில் ஏற்பட்ட மண்சரிவால் அங்கு பயிரிட்டிருந்த மிளகு, ஏலக்காய் உள்ளிட்ட விவசாய பொருட்கள்  நாசமடைந்தன. மேலும் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்ட காரணத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். காட்டுயானை உலாவுவதால் மின்சாரமின்றி மக்கள் வீட்டிக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர்.

Tags : house ,Munnar ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்