கடையம், நவ. 19: கடையம் அருகே ஆபத்தான முறையில் திறந்த நிலையில் கிடக்கும் மின் பெட்டியால் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது.கடையம் யூனியனுக்குட்பட்ட திருமலையப்பபுரம் பஸ் நிறுத்தம் அருகே மெயின்ரோட்டில் இரும்பு மின் கம்பம் அமைந்துள்ளது. இந்த மின்கம்பத்தில் சுவிட்ச் பாக்ஸ் மிகவும் தாழ்வான உயரத்தில் சிறு குழந்தைகள் தொடக்கூடிய நிலையில் உள்ளது. இதன் அருகிலேயே பள்ளி இயங்கி வருகிறது. தினமும் பள்ளி முடிந்ததும் மாணவ மாணவிகள் இந்த மின் கம்பம் அருகில் நின்று ஆட்டோவிலும் நடந்தும் செல்கிறார்கள். சுவிட்ச் பாக்சிலிருந்து வயர்களும் வெளியே தெரியும்படி தொங்கிக் கொண்டிருக்கிறது.