மதுரை, நவ. 19: திருமங்கலம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று (நவ.19ம் தேதி) காலை 11 மணியளவில் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது. மதுரை கோ.புதூர் மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் பிரீடா பத்மினி தலைமை வகிக்கிறார்.கூட்டத்தில் திருமங்கலம் கோட்டத்தை சேர்ந்த மின்நுகர்வோர்கள் தங்களது மின்விநியோக குறைகளை நேரில் தெரிவித்து பயனடையலாம்.