மதுரை, நவ. 19: நியூசிலாந்தில் இறந்த தனது மகனின் உடலை மதுரைக்கு கொண்டு வருவதுடன், இறப்பு குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி கலெக்டரிடம் தந்தை மனு அளித்தார். மேலூர் அருகே மேலவளவு அழகாபுரிப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (63). இவர் நேற்று கலெக்டர் வினய்யிடம் கொடுத்த மனுவில், ‘எனக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் 2வது மகன் பாலமுருகன் (34). பத்தாம் வகுப்பு படித்தவர். குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த பிப்.2ம் தேதி சமையல் வேலைக்கு நியூசிலாந்து நாட்டிற்கு சென்றார். அங்கு கிறிஸ்ட் சர்ஸ் சென்ட்ரல் சிட்டி நகரில் உள்ள கொழும்பு ரோட்டில் உள்ள பெர்மிட் ரோம் நிறுவனத்தில் சமையல் வேலை செய்து வந்தார். அவருக்கு ராணி என்ற மனைவியும், கவினாஸ்ரீ என்ற மகள் உள்ளனர். தினமும் அங்கிருந்து எங்களுடன் செல்போனில் பேசி வருவார்.