பழநி, நவ.19: பழநியில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் வஉசி நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. பழநி பஸ்நிலையம் அருகில் தமிழக வேளாளர் பேரவையின் சார்பில் வஉசி நினைவுநாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடந்தது. பேரவையின் கௌரவ தலைவர் கந்தவிலாஸ் செல்வக்குமார் தலைமை வகித்தார். சங்க நிர்லவாகிகள் ராஜாமணி, சண்முகநாதன், மதனம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வஉசியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.