×

1,595 பயனாளிகளுக்கு ரூ.2.18 கோடி நலத்திட்ட உதவி

திருப்பூர், நவ.18:திருப்பூரில் 1,595 பயனாளிகளுக்கு ரூ.2.18 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி, திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு ஆகிய பகுதிகளில் முதல்வரின் சிறப்பு குறைதீர் முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவுக்கு  கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் குணசேகரன், விஜயகுமார், தோப்பு வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் 1,595 பயனாளிகளுக்கு ரூ.2.33 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், ஊத்துக்குளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 397 பயனாளிகளுக்கு ரூ.73.77 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், திருப்பூர் தெற்கு தொகுதியில் 472 பயனாளிகளுக்கு ரூ.65.01 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், திருப்பூர் வடக்கு தொகுதியில் 726 பயனாளிகளுக்கு ரூ.79.75 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Tags :
× RELATED சட்ட பணிகள் குழுவுக்கு சட்ட தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம்