ஊட்டி, நவ. 19: கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியிருப்பதாவது: புதுடெல்லி மைய புனரமைப்பு இயக்ககம் மூலமாக தமிழ்நாட்டை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் பயன்பெறும் வகையில் வரும் 22ம் தேதி வேலைவாய்ப்பு கருத்தரங்கு மற்றும் வேலைவாய்ப்பு முகாம் சென்னை நந்தம்பாக்கம் டிரேடு சென்டர் வளாகத்தில் கன்வன்சன் சென்டரில் நடைபெற உள்ளது. இம்முகாமில் பல்வேறு பொதுத்துறை மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதால் முன்னாள் படைவீரர்கள் மறு வேலைவாய்ப்பு குறித்து ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல் தனியார் நிறுவன பிரதிநிதிகளுடன் நேரடி தொடர்பு ஏற்படுத்தி தரப்படும்.
இதன்மூலம் ராணுவ பணிக்கு பின் இரண்டாவது வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை பெறலாம். இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள கட்டணம் ஏதுமில்லை. வாய்ப்புகள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். இதில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் தமது சுய விவரத்தினை 5 நகல்கள், முன்னாள் படைவீரர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் வருகை புரிய வேண்டும். இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு seopadgr@desw.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ 011-26174531 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.