×

பாம்பேகேசில் சாலை இருபுறமும் வாகனம் நிறுத்துவதால் இடையூறு

ஊட்டி, நவ. 19: ஊட்டி ஏ.டி.சி.,யில் இருந்து பாம்பேகேசில் செல்லும் சாலையில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டு வருகின்றன.  நீலகிரி மாவட்டம் ஊட்டி நகருக்கு அருகில் பாம்பேகேசில், எல்க்ஹில் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் தனியார் பார்மஸி கல்லூரி, பிரசித்தி பெற்ற எல்க்ஹில் முருகன் கோயில், தோட்டக்கலைத்துறை அலுவலகங்கள், மாவட்ட தொழில் மையம் உள்ளிட்டவைகளும் அமைந்துள்ளன.

இப்பகுதிகளுக்கு செல்ல ஏ.டி.சி., பகுதியில் இருந்து சாலை உள்ளது. இச்சாலை மிகவும் மேடாக அமைந்துள்ளது. இதனால் இச்சாலையில் வாகனங்கள் மிகுந்த கவனத்துடன் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் இச்சாலையில் இருபுறமும் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி பாம்பேகேசில் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தாத வகையில் காவல்துைறயினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags : road ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...