கோவை, நவ:19: கோவையில் மாணவர்களுக்கு சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடந்த சைக்கிள் போட்டியில் 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். கோயம்புத்தூர் யுனைடெட் ரவுண்ட் டேபிள் 186 அமைப்பின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு சாலைப்பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும், சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் சைக்கிள் போட்டி நடந்தது. கோவை அவினாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் நேற்று காலை நடந்த இந்த போட்டியில் 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.