×

திருமாவளவன் குறித்து அவதூறு நடிகை காயத்ரி ரகுராமை கைது செய்ய வேண்டும்

கோவை,நவ.19: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாளவன் குறித்து டுவிட்டரில் அவதூறாக பதிவு செய்த நடிகை காயத்ரி ரகுராமை கைது செய்யவெண்டுமென கோவை போலீஸ் கமிஷனரிடம் அக்கட்சி நிர்வாகிகள் மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, திரைப்பட நடிகை காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. குறித்து அவதூறாக பதிவிட்டுள்ளார். அவர் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவாக பேசி சாதி கலவரத்தை தூண்டி வருகிறார். அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் தலைவர்களை இழிவாக பேசி வரும் காயத்ரி ரகுராமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

Tags : Gayatri Raghuram ,
× RELATED எப்படியெல்லாம் பொய் பேசுவாங்கனு 10...