வேலூர், நவ.19:சிறையில் செல்போன் பயன்படுத்திய வழக்கில் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை குற்றவாளி முருகன் வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டிசம்பர் 2ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 18ம்தேதி சிறைக்காவலர்கள் நடத்திய சோதனையில் முருகன் தங்கியிருந்த அறையில் இருந்து ஒரு செல்போனை கைப்பற்றினர். இதுதொடர்பாக பாகாயம் போலீசில் சிறைத்துறை அதிகாரிகள் புகார் அளித்தனர்.