வேலூர், நவ.19:வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடந்த 2ம் நிலை காலவர்களுக்கான உடற்தகுதி தேர்வில் 953 பேர் பங்கேற்றனர். இதனை ஐஜி சாரங்கன், டிஐஜி காமினி, எஸ்பி விஜயகுமார்(பொறுப்பு) ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த மாதம் நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் 46 ஆயிரத்து 700 பேர் தேர்ச்சி பெற்றனர். வேலூர் மாவட்டத்தில் 3,688 பேர், திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,334 பேர் என மொத்தம் 5,022 பேர் தேர்ச்சி பெற்றனர்.இவர்களுக்கான உடற்தகுதி தேர்வு வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் கடந்த 6ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அன்றைய தினம் அயோத்தி தீர்ப்பு வெளியானதால் காவலர் உடற்தகுதி தேர்வு ரத்து செய்யப்பட்டு 18ம் தேதிக்கு மாற்றப்பட்டது.இந்நிலையில், காவலர் தேர்வு ஆணையம் அறிவித்தபடி, வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் 2ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு நேற்று காலை 6.30 மணியளவில் தொடங்கியது. முதற்கட்டமாக கல்விச் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடந்தது.