×

சாக்லெட் வாங்கி தருவதாக 8 வயது சிறுமி பலாத்காரம் பீகார் தொழிலாளியை கண்டித்து தனியார் ஷூ கம்பெனி முற்றுகை ஆம்பூர் அருகே பரபரப்பு

ஆம்பூர், நவ. 19: ஆம்பூர் அருகே 8 வயது சிறுமியை சாக்லெட் வாங்கி தருவதாக ஷூ கம்பெனியில் வேலை செய்யும் பீகார் வாலிபர் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், அப்பகுதி மக்கள் நேற்று ஷூ கம்பெனியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 8 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 14ம் தேதி வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார். அப்போது வகுப்பறையில் சிறுமி அழுதுகொண்டே இருந்தார்.அவரிடம் ஆசிரியர்கள் விசாரித்தபோது எதுவும் கூறாமல் தொடர்ந்து அழுதுகொண்ட இருந்தாராம். இதனால் ஆசிரியர்கள், சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்ேபரில் பெற்றோர், பள்ளிக்கு வந்து சிறுமியிடம் கேட்டபோது, ஒரு வாலிபர் சாக்லெட் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்று பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதைகேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் தொடர்ந்து விசாரித்தனர். அதில், பீகார் மாநிலத்தை சேர்ந்த ஷகாபுதீன்(40) என்பவர் பச்சக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் சிறுமி தனியாக இருந்தபோது சாக்லெட் வாங்கி தருவதாக அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தது தெரிந்தது. இதையறிந்த ஷகாபுதீன் கடந்த 2 நாட்களுக்கு முன்பே தலைமறைவாகிவிட்டாராம்.இந்நிலையில், நேற்று காலை சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஷகாபுதீன் வேலை செய்த தனியார் ஷூ கம்பெனியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளிகள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதால் ஷூ கம்பெனியில் சேர்க்கக்கூடாது. தற்போது உள்ளவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர். மேலும் தலைமறைவாக உள்ள ஷகாபுதீனை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : shoe company siege ,Ambur ,
× RELATED ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...