×

கிராமப்புற 100 நாள் வேலையை 300 நாளாக நீட்டிக்க வேண்டும் லெனினிஸ்ட் வலியுறுத்தல்

குளச்சல், நவ.19: குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஊழியர் கூட்டம் மாவட்ட ஏ.ஐ.சி.சி.டி.யு. தலைவர் சுசீலா தலைமையில் குளச்சலில் நடந்தது. லெனினிஸ்ட் மாநில செயலாளர் நடராஜன், தலைமை குழு உறுப்பினர்  சங்கர் ,மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து ஆகியோர் பேசினர். கார்மல், அருள் டேவிட், அர்ஜூனன், பிச்சுமணி, ஜாண்சன், செல்வராஜ், யோனாஸ், லதா, தங்கலட்சுமி, விஜயலட்சுமி, சரசுவதி, கமலம், வேலாயுதம் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கிராமபுற 100 நாள் வேலை திட்டத்தை 300 நாளாக நீட்டிக்க கேட்பது, குளம்,சானல் கரைகளில் வசிக்கும் மக்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டி கொடுக்க கேட்பது, மருத்துவமனை, நகராட்சி, பேருராட்சிகளில் தூய்மை பணி செய்யும் தொழிலாளர்களுக்கு தினம் ₹.1000 ஊதியம் வழங்க கேட்பது, ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கையை குறைக்க முயற்சிக்கும் மத்தியரசை கண்டிப்பது எனவும் வலியுறுத்தப்பட்டது.

Tags : Leninist ,
× RELATED தொகுதி பங்கீடு நிறைவு பீகாரில் ஆர்ஜேடி 26, காங். 9, கம்யூ. 5 இடங்களில் போட்டி