×

இலவச பட்டா நிலத்தை அளவீடு செய்து தாருங்கள்

தூத்துக்குடி, நவ. 19: இலவச பட்டா இடத்தை அளவீடு செய்து தரக்கோரி தோப்பூர் பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.திருச்செந்தூர்  தாலுகா கீழதிருச்செந்தூர் தோப்பூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கலெக்டர்  அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், எங்கள் பகுதியில் எங்களுக்கு  ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் 51 நபர்களுக்கு  இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை இடம் அளவு செய்து  கல்போட்டு தரவில்லை. சர்வேயர் இல்லாததால் இடம் அளக்க முடியவில்லை என்று  சொல்கின்றனர். எனவே எங்களுக்கு அந்த இடத்தை அளந்து கொடுக்க வேண்டும். இவ்வாறு  கூறியுள்ளனர்.


Tags :
× RELATED புளியங்குளத்தில் திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் வாக்களிப்பு