பைக் விபத்தில் லோடுமேன் பலி

கோவில்பட்டி, நவ. 19: கோவில்பட்டி அருகே வானரமுட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து (45). இவர், கோவில்பட்டியில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். நேற்றிரவு வேலை முடிந்து பைக்கில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். நாலாட்டின்புதூர் அருகே வரும்போது எதிரே வந்த முடுக்குமீண்டான்பட்டியை சேர்ந்த சீனிப்பாண்டி மகன் செந்தில்குமார் (27) பைக்குடன் நேருக்குநேராக மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாரிமுத்து சிகிச்சை பலனின்றி இறந்தார். செந்தில்குமாருக்கு முதலுதவி தரப்பட்டு மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: