×

சாயர்புரம் பஜாரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டரிடம் வலியுறுத்தல்

தூத்துக்குடி, நவ. 19: சாயர்புரம் பஜாரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மச்சேந்திரன், கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சாயர்புரம் மெயின் பஜாரில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. இதற்கு மழைநீர் வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்புகளே காரணம். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டால் மழைநீர் தேங்காது. இதேபோல் இங்குள்ள கலைக்கல்லூரி, புளியநகர் பஸ் நிறுத்தம், மாதாகோவில் கெபி அருகே உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : Collector ,Saiyapuram Bazaar ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...