×

உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி

ஆறுமுகநேரி, நவ. 19: ஆறுமுகநேரி நகர இந்து மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம், சோமநாத சுவாமி கோயில் வளாகத்தில் நடந்தது. நகர பொதுச் செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சக்திவேல், அமைப்பாளர் தனலிங்கம், திருச்செந்தூர் ஒன்றிய தலைவர் இசக்கிமுத்து, மாவட்ட இளைஞரணி தலைவர் பாலன், நகர செயலாளர் வேலாயுதம், ஒன்றிய அனுமன் சேனா அமைப்பாளர் தங்கராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் ரவிகிருஷ்ணன் பேசினார்.

கூட்டத்தில் வருகிற உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்து மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது. அயோத்தி வழக்கில் ராமர் கோயில் கட்டலாம் என உச்சநீதிமன்ற தீர்ப்பு வழங்கியுள்ளதை வரவேற்று பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் நகர அமைப்பாளர் செல்வகுமார், இளைஞரணி பொதுச்செயலாளர் ராஜா, இளைஞரணி தலைவர் மூக்காண்டி, நகர துணை தலைவர் ராஜமூர்த்தி உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.


Tags : contest ,elections ,
× RELATED 2 தொகுதியில் ஒடிசா முதல்வர் போட்டி