×

திருச்செந்தூரில் இளம்பெண் மாயம்

திருச்செந்தூர், நவ. 19:   திருச்செந்தூரில் கோயிலுக்கு செல்வதாக கூறிச்சென்ற இளம்பெண் மாயமானார்.    திருச்செந்தூர் கரம்பவிளையை சேர்ந்தவர் பொன்ராஜ் (45), கொத்தனார். இவருக்கு மனைவி மற்றும் 3 மகன், ஒரு மகள் உள்ளனர். இவரது மகள் கன்னிகா (17), பிளஸ்2 முடித்துவிட்டு வீட்டில் இருந்துவந்தார். கடந்த 15ம் தேதி குலசேகரன்பட்டினம் கோயிலுக்கு செல்வதாக கூறிச் சென்றவர், அதன்பிறகு வீடு திரும்பவில்லை.    உறவினர்கள், தோழிகள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், திருச்செந்தூர் திருக்கேரில் எஸ்ஐ சங்கர் விசாரித்து வருகிறார்.

Tags : Tiruchendur ,
× RELATED திருச்செந்தூர் நகராட்சியில்...