×

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுகவினர் விருப்ப மனு

காஞ்சிபுரம், நவ.19:தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வரும் 2ம் தேதி அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதைதொடர்ந்து, திமுக சார்பில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன.காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ விருப்ப மனு பெறும் நிகழ்ச்சியை நேற்று ஆய்வு செய்தார்.காஞ்சிபுரத்தில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அப்துல் மாலிக் விருப்ப மனுக்களை பெற்றார். நகராட்சிக்கு நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், எஸ்கேபி சீனிவாசன், மாநில வர்த்தக அணி வி.எஸ்.ராமகிருஷ்ணன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கார்த்திகேயன், நெசவாளர் அணி சி.கே.தமிழ்ச்செல்வன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் சோபன்குமார், ஏ.எஸ்.முத்துசெல்வம் ஆகியோர் விருப்ப மனுக்களை அளித்தனர்.

மேலும் நகரமன்ற உறுப்பினருக்கு, நகர அவைத்தலைவர் சந்துரு, பூங்கொடி தசரதன், தாஸ், ஊராட்சி மன்றத் தலைவருக்கு கருணாகரன், வீரராகவன், மாவட்ட, ஒன்றிய பொறுப்புகளுக்கு எம்.எஸ்.சுகுமாறன், எஸ்கேபி கார்த்திக், செவிலிமேடு மோகன் உள்பட ஏராளமான திமுகவினர் மனு அளித்தனர்.  உத்திரமேரூர்: உத்திரமேரூர், சாலவாக்கம் ஒன்றியங்கள் மற்றும் உத்திரமேரூர் பேரூராட்சிகளில் திமுக சார்பில் உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் போட்டியிட திமுகவினர் மனு அளித்தனர்.காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு, திமுக சார்பில் போட்டியிடுபவர்களின் விருப்ப மனுக்களை பெற்று கொண்டார். வாலாஜாபாத்: உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளிடம் மனு பெரும் நிகழ்ச்சி வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், நேற்று நடந்தது.மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் மலர்மன்னன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுந்தர் கலந்துகொண்டு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுக நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்களை பெற்றார்.

Tags : DMK ,government ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி