பெரம்பூர்: சென்னை மாநகராட்சி, 6வது மண்டலம், 71வது வார்டில், பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் அருகே, கடந்த 2011ம் ஆண்டு, 93 லட்சம் செலவில், பெரம்பூர் நெடுஞ்சாலை வடக்கு பகுதி மற்றும் தெற்கு பகுதி ஜமாலியா செல்லும் வழியில் பிரமாண்ட பூங்கா, திமுக ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது. வடக்கு பகுதியில் உள்ள பூங்காவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், தெற்கு பகுதியில் ஜமாலியா செல்லும் வழியில் உள்ள பூங்காவை ஆரம்பம் முதலே அதிகாரிகள் முறையாக பராமரிக்கவில்லை. இதனால் பொலிவிழந்து, மக்கள் வரத்து குறைந்தது. இதை பயன்படுத்தி காதல் ஜோடிகள் அட்டகாசம் அதிகரித்தது. தற்போது இந்த பூங்கா முழுவதும் செடி கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. அதுமட்டுமின்றி, குடிமகன்கள் திறந்தவெளி பாராக இதை பயன்படுத்தி வருகின்றனர்.