புழல் பகுதியில் வாகனங்களை கண்காணிக்க தானியங்கி கேமராக்கள் அமைப்பு

புழல்: சென்னை மாதவரம் காவல் மாவட்டம் சார்பில் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் சோதனை சாவடி, செங்குன்றம், சாமியார் மடம், மாதாவரம் மேம்பாலம், மஞ்சம்பாக்கம் பைபாஸ் சாலை, வெள்ளிவாயல் சாவடி, எண்ணூர் ஆகிய 6  இடங்களில் வாகன பதிவு எண்களை பதிவு செய்யக்கூடிய தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் துவக்கி வைத்தல் மற்றும் புழல் காவல் நிலைத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் ஓய்வறை திறப்பு விழா நேற்று நடந்தது. சென்னை மாநகர கூடுதல் ஆணையர் (வடக்கு) தினகரன், தானியங்கி கண்காணிப்பு கேமரா மற்றும் மகளிர் காவலர்களுக்கு ஓய்வறையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் இணை ஆணையர் கபில் சரத்கார், மாதாவரம் துணை ஆணையர் ரவளி  பிரியா, உதவி ஆணையர்கள் புழல் ரவி, மாதவரம் ராமலிங்கம் மற்றும் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: