மின்சாரம் பாய்ந்து துப்புரவு ஊழியர் பலி

வேளச்சேரி: சென்னை சூளை, கோட்டூர் நல்லமுத்து முதல் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜுலு (41). இவர், சென்னை மாநகராட்சி, 5வது மண்டலத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை  தரமணி, எம்ஜிஆர் நகர், மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். அங்கு, வீட்டின் மாடியில் இரவு 9 மணியளவில் தனது உறவினருடன் பேசிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவர கை, அந்த வீட்டின் மேல்பகுதியில் சென்ற உயர் அழுத்த மின்கம்பி மீது உரசியது. இதில், கோவிந்தராஜுலு  உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து வந்த தரமணி போலீசார், கோவிந்தராஜுலு சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: