சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சுங்கத்துறை அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சுங்கத்துறையில் அதிகாரியாக இருந்தவர் ஜெகமோகன் மீனா. இவர் கடந்த 1.11.07 முதல் 24.11.09 வரை பணியில் இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக 1.89 லட்சம் சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், பணியில் இருந்த காலத்தில் ஜெகமோகன் மீனா, அவர் பெயரிலும், அவரது குடும்பத்தினர் தார்மி மீனா, நிரஞ்சன் குமார் மீனா ஆகியோர் பெயரிலும் சொத்துகளை சேர்த்தது தெரியவந்தது. பின்னர், இதனை உறுதி செய்த சிபிஐ அதிகாரிகள், இந்திய தண்டனை சட்டம் 467, 468, 471 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மூன்று பேரும் மீது வழக்கு பதிவு செய்தனர்.