அண்ணாநகர்: சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் ஷேக் பரீத் (38). இவர் ஐசிஎப் அம்பேத்கர் ரோட்டில் சூப் கடை நடத்துகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (65). இவர், நேற்று முன்தினம் இரவு மது போதையில் ஷேக் பரீத் கடைக்கு சென்று, இலவசமாக சூப் கேட்டுள்ளார்.
அதற்கு ஷேக் பரீத், ‘பணம் கொடுத்தால்தான் சூப் தருவேன்’ என்று கூறியதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த லட்சுமணன், மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து ஷேக் பரீத் முகத்தில் சரமாரியாக கிழித்துவிட்டு தப்பியோடினார்.