×

ஓய்வுபெற்ற அலுவலர் சங்க கூட்டம்

அரியலூர், நவ. 14: திருமானூரில் உள்ள புனித அருளானந்தர் ஆலய கூட்டரங்கில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க வட்டார கூட்டம் நடந்தது. வட்டார தலைவர் கணேசன் தலைமை வகித்தார். புலவர் சிவானந்தம், பஞ்சநாதன் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ஜெபமாலை வரவு செலவு கணக்கு வாசித்தார்.
கூட்டத்தில் தமிழக அரசால் மாவட்ட கருவூலத்தில் வழங்கப்படும் ஓய்வூதியர்கள் அடையாள அட்டை பெற்று கொள்வது, ஓய்வூதியர்கள் வாரிசு நியமனம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இணை செயலாளர் அனிமாமலர் நன்றி கூறினார்.

Tags : Retired Officers Association Meeting ,
× RELATED புதுக்கோட்டையில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கூட்டம்