பாபநாசம், நவ. 14: பாபநாசம் அருகே சாலியமங்கலம் செல்லும் சாலையில் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை விரைந்து சீரமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாபநாசத்தில் சாலியமங்கலம் செல்லும் சாலையோரம் பல மின்கம்பங்கள் உள்ளது. இதில் ஒரு மின்கம்பம் சாய்ந்து எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. இதனால் மின்கம்பம் அருகே செல்ல பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சப்பட்டு வருகின்றனர். சாலியமங்கலம் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே மின்கம்பத்தை விரைந்து சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.