ஜோலார்பேட்டை, நவ.14: ஜோலார்பேட்டை ரயில்வே பணிமனையில் கேஸ் சிலிண்டரில் ஏற்பட்ட திடீர் தீயை நாட்றம்பள்ளி தீயணைப்பு வீரர்கள் விரைந்து அணைத்ததால் பேராபத்து தவிர்க்கப்பட்டது. ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே பணிமனையில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் ரயில்வே பணிமனையில் பழுதான கூட்ஸ் ரயில் பெட்டிகள் பழுது பார்க்கும் பணி நடைபெற்று வந்தது.அப்போது, ரயில் பெட்டிகளில் இருந்து பழுதான உதிரிபாகங்களை வெல்டிங் மூலம் அகற்றும்பணியில் ரயில்வே ஒப்பந்த ஊழியர் ஈடுபட்டார். அப்போது, அசிட்டிலின் காஸ் சிலிண்டர் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைப்பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.